Feb 2, 2014

ஆன்மீகப்பாரம்பரியத்தை சேர்ந்தவர்கள்

இளைஞர்கள் நவீனமாக இருக்க வேண்டும்;ஆனால் அதே நேரத்தில் மேற்கத்திய நடைமுறைகளையும் பழக்க வழக்கங்களையும் கண்மூடித்தனமாக பின்பற்றக் கூடாது.

நமது பாரத தேசம் மகத்தான ஆன்மீகப்பாரம்பரியத்தை கடந்த 200 நூற்றாண்டுகளாக வளர்த்தெடுத்துள்ளது;நாம் ஒவ்வொருவருமே சித்தர்கள் பரம்பரையைச் சேர்ந்தவர்கள்;காலத்துக்கேற்ற மாற்றம்;பாரம்பரியத்தைக் கைவிடாத மாற்றம் என்ற கொள்கையில் ஒவ்வொரு நாளும் பிடிவாதமாக இருக்க வேண்டும்;நமது ஆன்மீகச் சிறப்புகளையும்,தொன்மையையும் யாருக்காவும்,எதற்காகவும்,எப்போதும் விட்டுக்கொடுக்கக்கூடாது;இதில் நாம் பெருமிதம் கொள்ள வேண்டும்.

காலத்திற்கேற்ப மாறுதல்களை உள்வாங்கிக் கொள்வது தவறல்ல;ஆனால்,அதே சமயத்தில் நமது கலாச்சாரத்தையும்,தர்மத்தையும் கைவிட்டுவிடலாமா?

முன்னேற்றம் என்ற பெயரில் நமது பண்பாட்டுக்கு எதிரான செயல்களை நாகரீகம் என்று ஏற்றுக்கொள்ளலாமா?

ஒருபோதும் மனித நேயத்தையும்,பரிவுணர்வையும்,பிறருக்கு உதவி செய்வதையும் கைவிட்டுவிடக்கூடாது.அனைத்து தரப்பினரையும் அரவணைத்துச் செல்வது நமது பாரம்பரியம் என்பதை ஒருபோதும் மறக்கக் கூடாது.ஒருங்கிணைந்து பணிபுரியும் பண்பினை நாம் அனைவரும் வளர்த்துக் கொண்டால்,சில வருடங்களிலேயே நமது தேசம் வலிமைமிக்கதாக மாறிவிடும்.

சுவாமி விவேகானந்தரின் பேச்சு,
விஜயபாரதம்,
வெளியீடு 7.2.14

0 comments:

Post a Comment