Oct 30, 2013

தன்னம்பிக்கையின் மறுபெயர் தெரியுமா?

ஒரு ஊரில் அரசன் ஒருவன் இருந்தார். அதிகாலையில் எழுந்தவுடன் சூரிய உதயத்தைப் பார்ப்பது அவரது வழக்கம்.

ஒரு நாள் காலையில் சூரியோதத்துக்கு பதில் பிச்சை காரன் முகத்தில் விழித்து விட்டார் அதனால் கோபத்தோடு கீழே இறங்க திரும்பியபோது தலையில் அடிபட்டு ரத்தம் வந்துவிட்டது கடுப்பாகிய அரசர் பிச்சைகாரனை அரண்மனைக்கு இழுத்துவர செய்து தூக்கிலிட கட்டளை பிறப்பித்தார். பிச்சைகாரன் கலங்கவில்லை கல கலவென சிரிக்க தொடங்கினான்

அரசருக்கு மேலும் கோபம் மற்றவர்களுக்கு திகைப்பு பிச்சைக்காரன் சொன்னான் என் முகத்தில் நீங்கள் விழித்தால் உங்களுக்கு சிறு காயம் மட்டுமே உங்கள் முகத்தில் நான் முழித்ததால் என் உயிரே போக போகிறதே அதை எண்ணி சிரித்தேன் என்றான்,

அரசன் தன் தவறை உணர்ந்து தலை குனிந்தான்
தண்டனை ரத்து செய்யப்பட்டது.

தைரியம் என்பது தன்னம்பிக்கையின் மறுபெயர். அது இல்லையென்றால், சமயத்தில் உயிரைக் கூட காப்பாற்றிக் கொள்ள முடியாமல் போய் விடும்.

0 comments:

Post a Comment