Jul 29, 2013

ஒரு கன்னத்தில் அறைந்தால்.....?

இந்துமதத்தில் ஒரு முக்கியமான விசயம் இருக்கிறது அதனைப் பற்றி கண்டிப்பாக நாம் அறிந்துகொள்ளவேண்டும். 

ஒருவனுக்கு நீங்கள் தீங்கு செய்தால், கண்டிப்பாக அந்த பாவத்தை நீங்கள் அனுபவித்தே தீரவேண்டும். அதே உங்களுக்கு பல மடங்கு தீமையாக திரும்பிவரும். இந்துமதத்தில் பாவமன்னிப்பு என்பது கிடையாது. ஒரு ஏழையை ஒருவன் வஞ்சித்தால் அவனை அவன் வணங்கும் கடவுள்  திரும்பி வஞ்சிப்பேன் என்று தான் கையில்ஆயுதத்தோடு இருக்கிறது. ஒவ்வொரு கடவுள் கையில் இருக்கும் ஆயுதங்கள் எல்லாம் தன் பக்தனை காப்பாற்ற நான் வைத்திருக்கிறேன் என்ற அர்த்தத்துடன் தான் இருக்கிறது. 

இயேசுநாதர் சொல்லிருப்பார் ஒரு கன்னத்தில் அறைந்தால் இன்னோரு கன்னத்தை திருப்பிகாட்டு என்பார். இயேசு சொன்ன வார்த்தையை நம்ம ஆளுங்க எடுத்துக்கொண்டு இவர்களை யார் தாக்கினாலும் 'இயேசு சொல்லிருக்கிறார் ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தை காட்டவேண்டும்' என்று அதனால் நான் அடிப்பவனை எதிர்காமல் மறுகன்னத்தை காட்டுகிறேன் என்பான். இங்கு உள்ள ஞானிகள் சொன்ன கருத்து இவன் காதுக்கு கேட்காது. அவர்கள் சொன்ன கருத்தை எடுத்துக்கொண்டு நம்ம ஆளுங்க சொன்ன கருத்தை விட்டுவிட்டார்கள். 

நம்ம ஆளுங்க கருத்தை அவர்கள் எடுத்துக்கொண்டுவிட்டார்கள். உதாரணத்துக்கு, அமெரிக்காவில் இரட்டை கோபுரத்தை தாக்கியதற்க்கு ஒரு நாட்டையை அழிக்கவேண்டும் என்று முடிவு எடுத்து அழிக்கிறான் அமெரிக்கா காரன். அவன் இயேசு சொன்ன கருத்தை எடுத்துக்கொள்ளவில்லையே. அவன் நமது ராமனோடு கருத்தை எடுத்துக்கொண்டு செயல் புரிந்தான். ராமனோடு மனைவியை ஒருவன் கடத்திக்கொண்டு சென்றதால் ஒரு நாட்டையை அழித்தான் ராமன். அதனை எடுத்துக்கொண்டு அமெரிக்காகாரன் செயல்பட்டான். 

நம்ம ஆளுங்க இயேசுவோடு கருத்தை எடுத்துக்கொண்டு அடிவாங்கிக்கொண்டு இருக்கிறான். இன்னும் புரியும் படி சொல்லவேண்டும் என்றால், உங்களின் மனைவியை ஒருவன் கையை பிடித்து இழுக்கும்பொழுது அவனை நீங்கள் அடிப்பீர்களா அல்லது அவன் செய்கின்ற செயல் தீயவை அந்த கர்மத்தை அவன் அனுபவிப்பான் என்று ஏண்டா ஒரு கையை மட்டும் பிடித்து இழுக்கிறாய் இன்னோரு கையும் நீங்களே பிடித்து அனுப்பிவீர்களா?   

உயர்ந்த ஞானியோடு கருத்தை எடுத்துக்கொண்டு இல்லறத்தில் வாழ்பவன் வாழமுடியாது. அவதார புருஷனாக வந்து வாழ்ந்து காட்டிய மகான்கள் பாரததேசத்தில் நிறைய பேர் இருக்கிறார்கள். அவர்களின் வாழ்க்கையை நோக்கினால் தெய்வம் நின்று கொல்லும் என்பதை உங்களுக்கு சொல்ல தேவையில்லை. 

உன் கையை ஒருவன் வெட்டினால் அவனின் கையை நீ வெட்டு அல்லது கடவுளாக நான் வந்து வெட்டுவேன் என்று தான் மதத்தில் சொல்லிருக்கிறார்களே ஒழிய. ஒரு கையை வெட்டினால் இன்னோரு கையையும் வெட்டுங்கள் என்று திரும்பி நிற்க சொல்லவில்லை. 

0 comments:

Post a Comment