Jan 24, 2014

இருப்பதைக் கொடுத்தால் நினைப்பது கிடைக்கும்

இளைஞனின் பையில் இருந்ததென்னவோ முப்பது ரூபாய்தான்.

சாப்பாட்டுப் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு அமர்ந்தவன் கண்களில்,

உணவின்றித் தவித்த இருகுழந்தைகளும் ஒரு முதியவரும் பட்டனர். பொட்டலங்களைக் கொடுத்தான்.

முதியவர் மகிழ்ந்து, தன்னிடமிருந்த பழைய செப்பு நாணயங்களைக் கொடுத்தார்.

அதே நாளில் பழைய நாணயங்கள் சேகரிக்கும் கோடீஸ்வரர் ஒருவரைக் காண நேர்ந்தது.

இந்த நாணயங்கள் நல்ல விலைக்குப் போயின.

கொடுப்பவர்களே பெறுகிறார்கள் என்பது புரிந்தது.

0 comments:

Post a Comment